அமித்ஷாவே நினைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது - அமைச்சர் கே.என்.நேரு.!!
minister kn neru speech about amitsha speech
நேற்று நெல்லையில் பாஜகவின் தென்மண்டல பூத் கமிட்டியின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அவருக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, எம்.எல்.ஏ.க்கள் இசக்கி சுப்பையா, கிருஷ்ணமுரளி ஆகியோரும் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து இந்த மாநாட்டில் பேசிய அமித்ஷா, “நாடாளுமன்றத்தில் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் யாரும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்ற புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தை மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார்.

அவர் இந்த சட்டத்திருத்தத்தை கருப்புச்சட்டம் என்று கூறுகிறார். அப்படி கூறுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. உரிமையும் இல்லை. ஏனென்றால் அவர் தான் இருட்டு, கருப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. உதயநிதி ஸ்டாலின் ஒரு நாளும் முதலமைச்சராக வரமுடியாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுங்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெல்லையில் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
"விவசாயத்தில் மட்டும்தான் வேரோடு அகற்ற முடியும்; எங்களை எதுவும் செய்ய முடியாது. அப்படி செய்தால் திமுக பெரிதாக முளைக்கும். அமித்ஷாவே நினைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது; 15 ஆண்டுகளாக அந்த வேலையை தான் அவர்கள் செய்கிறார்கள். பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது; தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தான்... திமுக கூட்டணிதான் வெற்றி பெற்று வருகிறது.
பாஜகவினர் ஆசை ஒருபோதும் நிறைவேறாது; அவர்கள் நினைப்பது எதுவும் நடக்காது. திமுகவிற்கு போட்டியே கிடையாது. தொடர்ந்து திமுக வெற்றி பெறும். இதே தொகுதியில் நாங்கள் வென்று காட்டுவோம்.
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி; அதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று கூறி வருகிறார்கள். முதலமைச்சரை யார் என்ன புனைப்பெயர் வைத்து அழைத்தாலும்.. அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister kn neru speech about amitsha speech