பா.ஜ.கவை தமிழகத்தில் இருந்து ஓட ஓட விரட்ட வேண்டும் - பரபரப்பு கிளப்பிய அமைச்சர்!  - Seithipunal
Seithipunal


திருப்பூர், தாராபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்றார். அப்போது அவர் பேசி இருப்பதாவது, தமிழகத்திலிருந்து பா. ஜனதா கட்சியை மக்களவைத் தேர்தல் மூலம் ஓட ஓட விரட்ட வேண்டும். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் எல். முருகன் ஆகியோர் மத்திய மந்திரிகளாக உள்ளனர். இந்த மூன்று பேரும் எம்.பி. பதவிக்கு எப்படி வந்தார்கள். 

மக்களை சந்தித்து வாக்குகள் கேட்டு இவர்கள் வெற்றி பெறவில்லை. பிரதமர் மோடி ஆசீர்வாதத்துடன் மந்திரி பதவி வகித்து வருகின்றனர். இவர்களில் ஒருவராவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா. 

ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்க தைரியம் இல்லை. தி.மு.கவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் நிற்க கூட தகுதி கிடையாது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Kayalvizhi selvaraj speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->