திமுக குடும்பம் அமைச்சராக இருந்து என்ன செஞ்சாங்க?.. எல்லாம் ஓன் டெவலப்மன்ட்.. அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு.!
Minister Jeyakumar Pressmeet 21 September 2020
தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு இப்போதிலிருந்தே துவங்க ஆரம்பித்துவிட்டது. ஆளும் கட்சியை எதிர்கட்சியினரும், எதிர்க்கட்சியின் முற்கால துரோக வரலாறுகளை ஆளுங்கட்சியினரும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில், " கடந்த கால வரலாற்றை நாம் பார்க்க வேண்டும். இன்றுள்ள இளைஞர்கள் அனைத்தையும் எளிதாக தெரிந்துகொள்கின்றனர். திமுகவின் விரோதம் என்ன என்பது அவர்களுக்கு தெரியும். ஹேமாவதி ஆற்றின் குறுக்கே அன்று அணையை கட்டவில்லை என்றால் இன்று காவேரி பிரச்சனையே இருந்திருக்காது.
பல இலக்காக்கள் அடங்கிய அமைச்சரவையை வாங்கி, தங்களின் குடும்பத்தினை மட்டுமே அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். திமுக விவசாயிகளுக்காக என்ன செய்தது. திமுகவின் அன்றைய செயலே வியாபாரிகளுக்கு கூட பெரும் இழப்பை தந்தது " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Minister Jeyakumar Pressmeet 21 September 2020