ரேஷன் கடை காலிப்பணியிடங்கள் விரைந்து நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் அறிவிப்பு.!
Minister I Periyasamy Pressmeet at Coimbatore 29 July 2021
ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழகத்தில் கொரோனா கால நிவாரணம் பெறாத பயனாளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருள் வழங்கப்படும்.
கூட்டுறவுத்துறை மூலமாக விவசாயிகளுக்கு நடப்பு வருடத்தில் ரூ.11,500 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷனில் காலியாக உள்ள விற்பனையாளர், பொருள் கொடுப்பவர்கள் உட்பட அனைத்து காலிப்பணியிடமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 55 ஆயிரம் சுய உதவிக்குழுவுக்கு கடன் வழங்குவதை ஒரு இலட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப அட்டைகள் இல்லாதவர்கள் மனு வழங்கினால் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப அட்டைக்கு இதனால் காத்திருக்கும் நேரம் குறையும்.
விவசாயிகள், சிறு-குறு தொழில் முனைவோர், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக உறுப்பினராக சேர்க்கப்பட்டு கடன் உதவிகள் வழங்கப்படும். கூட்டுறவுத்துறையின் மருந்தகம் மற்றும் தனியார் மருந்தகத்திற்கு இணையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Minister I Periyasamy Pressmeet at Coimbatore 29 July 2021