இருக்க இடம்கொடுத்ததுக்கு, குடும்பத்தில் புகுந்து இளைஞர் செய்த செயல்.! அதிர்ச்சியில் காவல்துறையினர்.!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவருக்கு கௌசல்யா என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கின்றது. மெக்கானிக்காக இருக்கும் கோபிநாத் புதுச்சேரியில் இருக்கும் ராஜாஜி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்  கோபிநாத்தின் உறவினர் கார்த்திக் என்ற இளைஞர் இவர்களுடன் வசித்து வந்துள்ளார். 

கடந்த 16ஆம் தேதி கோபிநாத்தின் வீட்டுக் கதவு திறந்து கிடந்தது. இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, தூக்கில் தொங்கிய நிலையில், கோபிநாத் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

இந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், தலைமறைவாக இருக்கும் கௌசல்யா மற்றும் கார்த்திக் ஆகியோரை தேடி வந்துள்ளனர். அப்போது அவர்களை கண்டறிந்து விசாரணை நடத்தியதில், கார்த்திக்கும், கௌசல்யாவும் கள்ளக்காதல் செய்ததும், இவர்களது உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததால் கணவனை போட்டுத் தள்ளியதும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Men killed by her wife and friend 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->