போலீசில் அளித்த வித்தியாசமான புகார்.! சேலத்தில் நாயின் உரிமையாளர் கைது.!  - Seithipunal
Seithipunal


நாய் கடித்துவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட காரணத்தால் நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சேலத்தில் இருக்கின்ற சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு அருகே வழக்கம்போல நடந்து சென்று இருக்கின்றார். அப்பொழுது, திடீரென்று அவர் மீது நாய் ஒன்று பாய்ந்து அவரை கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, அவருக்கு பயங்கர காயமடைந்துள்ளார்.
 
இந்த நிலையில், ஹரி விக்னேஷ் காவல் நிலையத்தில் நாய் ஒன்று தன்னை கடித்து விட்டதாகவும் நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  புகார் அளித்தார். 

அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாயின் உரிமையாளர் பிரபாகரை அஜாக்கிரதையாக பராமரித்தல் உள்ளிட்ட  மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பிரபாகரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறனர். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MEN ARRESTED BY POLICE FOR DOG


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->