ஊசியை காட்டி மிரட்டி மருந்து வாங்க வந்த குழந்தைகளிடம் தகாத வேலை!! - Seithipunal
Seithipunal


துரையில் மெடிக்கல் ஷாப் நடத்திவரும் சங்கர் கணேஷ் என்பவரது மெடிக்கல் ஷாப்பிற்கு தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்திற்காக மருந்து வாங்குவதற்கு இரண்டு சிறுமிகள் வந்துள்ளனர். 9 மற்றும் 10 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் வந்துள்ளனர்.

அப்பொழுது சங்கர் கணேஷ் சிறுமிகளுக்கு பின் வந்த வாடிக்கையாளர்களுக்கு மருந்து கொடுத்து அனுப்பிவிட்டு, சிறுமிகளை கடைக்குள் அழைத்துள்ளார். இதை தொடர்ந்து அந்த நபர் உடைகளை களைத்து சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பயத்தில் கூச்சலிட்ட சிறுமிகளிடம் ஊசியை காண்பித்து மிரட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். ஆனால் வீட்டிற்கு சென்ற சிறுமிகள் பயத்தில் இருக்கவே பெற்றோர்கள் விசாரித்தனர்.

அப்போது சிறுமிகள் அவர்களுக்கு நடந்து குறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் மெடிகல் ஷாப் நடத்தி வந்த சங்கர் கணேசை போலீசார் உடனடியாக கைது செய்தது. பின்னர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

medical shop owner misbehave with 9 years old girls


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->