நாளை முதல்..! மருத்துவ முகாம்களில் ரூபெல்லா தடுப்பூசி!
medical camp Rubella vaccine tomorrow
திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கன மழையால் பல்வேறு பகுதிகளின் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் தலைமையில் 55 மருத்துவக் குழுவைக் கொண்டு 144 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
மருத்துவ முகாமில் நாளை முதல் ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் 33 மருத்துவ குழுவினர் மற்றும் 440 பணியாளர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் இருந்து 55 மருத்துவக் குழுவினர் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
medical camp Rubella vaccine tomorrow