நாளை பழனி கோயில் கும்பாபிஷேகம்.. இறைச்சி விற்பனை செய்ய தடை விதிப்பு.! - Seithipunal
Seithipunal


பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடுதல் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 18ஆம் தேதி பூர்வாங்க பூஜை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக கொண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்ற வருகின்றன. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான படிப்பாதை பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

இந்த நிலையில் பழனி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.

 நாளை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதால் கோழி, ஆடு, மீன் மற்றும் மாடுகளை வதை செய்வதும் அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி இறைச்சியை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meat Shop closed in Pazhani tomorrow


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->