எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை தொடக்கம்.!
MBBS and BDS courses application from tomorrow
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிப்போகும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவு வெளியாகி தமிழகத்தில் 78,000 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற வாய்புள்ளதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஒதுக்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்கள் எடுத்து படித்தவர்கள். நீட் தேர்வு எழுதி எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியும் என்பதை குறிப்பிடத்தக்கது.
English Summary
MBBS and BDS courses application from tomorrow