கமலஹாசனை நேரில் சந்தித்த மேயர் பிரியா! அப்டேட் கொடுத்த அமைச்சர் சேகர்பாபு! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை திமுக அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா இன்று நேரில் சந்தித்தனர்.

வரும் 28ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்த கைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருமாறு கமல்ஹாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

கமலஹாசனுடன் நடந்த இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு தெரிவிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதையை விளக்கும், புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்க மநீம தலைவர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளார்" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும் சில முக்கிய செய்திகள் : 

* கடலூர்: நெய்வேலி வடக்குத்து பகுதியில் விபச்சாரம் நடத்திவந்த கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓ.பி.சி. அணி பொதுச் செயலாளர் ராம்குமார் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.


* காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க சென்ற காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

11 மீனவர்கள் இருந்த படகில் 7 பேரை கடலில் தள்ளியதாகவும், 4 பேர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் புகார்; படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி, வலைகளை எடுத்துச் சென்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayor priya meet Kamalhaasan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->