மதுபோதையில் திருநங்கைகள் கிண்டல்.. 5 இளைஞர்களால் ஒருவர் படுகொலை.!
Mayiladuthurai youngster Murder by 5 Man Team Police Investigation 8 April 2021
திருநங்கையை கிண்டல் செய்த நபரை 5 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். ஐயப்பன் மதுபோதையில் அப்பகுதியை சேர்ந்த திருநங்கைகளை ஆபாசமாக பேசி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விஷயத்தை அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் திருநங்கைகள் கூறியுள்ளனர். மேலும், ஐயப்பனை கண்டிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து, திருநங்கைகளுக்கு ஆதரவாக ஐயப்பனை 5 பேர் கொண்ட இளைஞர்கள் கண்டிக்க சென்றுள்ளனர்.
இதன்போது, இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறு அடிதடியாக மாறியது. இந்த நிலையில், 5 இளைஞர்களும் ஐயப்பனை சரமாரியாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Mayiladuthurai youngster Murder by 5 Man Team Police Investigation 8 April 2021