பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மயிலாடுதுறையில் உடற்கல்வி ஆசிரியர் கைது.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த 21 வயது மாணவி, மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் கடந்த 2010 ஆம் வருடம் முதல் 2018 ஆம் வருடம் வரை மயிலாடுதுறையில் இருக்கும் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளரிடம் இணையவழியில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், " தான் பள்ளியில் பயின்று வந்த சமயத்தில் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை (வயது 50) என்பவரிடம், தடகளப்பயிற்சி விளையாட்டுக்காக பயிற்சி பெற்றேன். 

இதன்போது, அண்ணாதுரை என்னிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசுவது என்று பாலியல் தொல்லை அளித்தார். கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக என்னை கல்வி உதவித்தொகை பெற வேண்டி வீட்டிற்கு அழைத்த அவர், பாலியல் தொல்லை கொடுத்தார். பள்ளியில் பயின்ற போது எனக்கு பலமுறை பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். அவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மயிலாடுதுறை மகளிர் காவல்துறையினருக்கு விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மகளிர் காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தனர். 

மேலும், அண்ணாதுரை கைது செய்யப்பட்டு விபரம் அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவரிடம் பயிற்சி மேற்கொண்ட மாணவ - மாணவிகள் பள்ளிக்கு முன்னர் திரண்டு, அண்ணாதுரை எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவரின் மீது மாணவி உள்நோக்கத்துடன் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்ட தொடங்கியதை அடுத்து, காவல் துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai PET Teacher Arrest by Police Complaint by Girl Sexual Torture 6 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->