சொத்துக்காக வெவ்வேறு இடத்தில் பிளான் போட்டு அரங்கேறிய கொலைகள்.. கும்பகோணத்தில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கிளார்க் நகர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் காமராஜர். உடல்நலம் சரியில்லாத தனது தந்தையுடன் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்த சமயத்தில், இவரை இடைமறித்த மர்ம நபர்கள் காமராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். 

தந்தை பார்த்திபன் காயமின்றி உயிர் தப்பியுள்ளார். இந்த நிலையில், இந்த கும்பல் காமராஜின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த அவரது நண்பர் சக்திவேலை வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சக்திவேலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயத்தை அறிந்த கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம், அரசு மருத்துவமனை முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காவல் துறையினர் விசாரணையில் காமராஜ் மற்றும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே கடந்த 15 வருடமாக சொத்து தகராறு இருப்பதாகவும், இதன் காரணமாக கொலை அரங்கேறியிருக்கலாம் என்றும் நாச்சியார்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக ஆனந்த், கண்ணன், சசிகுமார், சம்பத் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலையில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டத்தில் குதிக்கவே, இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Kumbakkonam twice Murder police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->