தமிழ்நாட்டில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி இல்லை.!! வெளியான அதிரடி உத்தரவு.!!
Manju virattu not permitted in Pudukkottai tamilnadu
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின் போது காவலர் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததால் இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடந்த மஞ்சுவிரட்டு போட்டியின் போது சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அதனை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஜல்லிக்கட்டு போட்டி போன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன்படி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிய வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் மஞ்சுவிரட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது எனவும் மாவட்ட நிர்வாகம் உறுதிப்பட அறிவித்துள்ளது.
English Summary
Manju virattu not permitted in Pudukkottai tamilnadu