ஆந்திரா | ரூ. 8 கோடி பறிமுதல்: சிக்கிய 2 பேர்! அதிகாரிகள் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற வருகிறது. இதனால் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் கரிகாபாடு சோதனை சாவடியில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திரா மாநிலம், என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட பணம், குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியின் உள்ளே ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக லாரியில் பயணம் செய்த 2 பேரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra 8 crore money seize


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->