முந்திரி காட்டில் காதலியுடன் தனிமையில் இருந்த 2 மனைவிகளின் கணவன்!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் கண்டரமாணிக்கம் வளையப்பட்டி  என்னும் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. 33 வயதான இவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் வேலை விஷயமாக திருப்பூர் சென்ற சுப்பையா அந்த ஊரில் வசித்து வரும் ராமமூர்த்தியின் மகள் மீனாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த மீனாவின் தந்தை மீனாவை அழைத்துக்கொண்டு அவரது தாத்தா வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று திருமண விழாவிற்கு தாத்தா வெளியூர் சென்றிருந்தார். அப்போது இரவு 10 மணி அளவில் மீனாவை சந்திக்க வந்த சுப்பையா அவரிடம் ஆசையாக பேசி முந்திரி காட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து வாழ முடியாது. எனவே சேர்ந்து சாகலாம் என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் குருணை மருந்தை குடித்துள்ளனர். பின்னர், மீனா இதுகுறித்து அவரது வீட்டுக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சுப்பையா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மீனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man suicide in Cashew forest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->