மதுபோதையில் தகராறு.. லாரி ஏற்றி கொன்ற வடமாநில டிரைவர்.. சென்னை அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் தகராறு செய்தவர்கள் மீது ஓட்டுநர் லாரி ஏற்றிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வடபெரும்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான லாரி பார்க்கிங் யார்டு செயல்பட்டு வருகிறது. அங்கு கமலக்கண்ணன் (36) குமரன் (34) நவீன் (25) ஆகிய மூவரும் மது அருந்தி வந்துள்ளனர். அப்போது, வடமாநில லாரி டிரைவர் லாரியை எடுக்க முயற்சி செய்துள்ளார்.

அதனால், அவர்களுக்கும் லாரி டிரைவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. போதையில் இருந்த அவர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதில், கோபமடைந்த லாரி டிரைவர் மூவர் மீதும் லாரியை ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதில், கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாமடைந்த குமரன், நவீன் ஆகிய இருவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் கண்ணையா லால் சிங், கிளீனர் கிரீஷ்குமார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man Murder In Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->