விருதுநகர் || பட்டாசு ஆலையில் தீ விபத்து - தொழிலாளர்களின் கதி என்ன?
man died for fire accident in fire crackers factory
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கண்டியாபுரத்தை சேர்ந்த சண்முகராஜ் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் படி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து, தீயை அணைத்து உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்ட சதியா? என்ற விதத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man died for fire accident in fire crackers factory