கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை.. புதுகோட்டை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கொப்பனாபட்டி பகுதிய சேர்ந்தவர் சின்னதம்பி. இவருக்கு திருமணமாகி செல்வராணி  என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். சின்னதம்பி தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி வந்துள்ளார். ஆனால், வாங்கி கடனை திரும்ப கொடுக்காமல் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூலங்குடி செட்டிச்சி ஊரணி அருகே உள்ள தைலமரக்காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தூக்கில் தொங்குவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சின்னதம்பியின் சடலம் என்பாதை உறுதி செய்ததை அடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man committed suicide Due to Debt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->