திருவாரூர் || திருமணத்திற்கு மறுத்த காதலி.. காதலன் செய்த வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், கொட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் மதியரசன். இவர் நீடாமங்கலத்தை சேர்ந்த பெண்ணை 4  ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதல் விவகாரம் இவரது வீட்டிற்கும் தெரியவரவே இரு வீட்டிலும் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இருவீட்டிலும் தனித்தனியே வரன் பார்த்து நிச்சயம் செய்தனர்.

இந்நிலையில், வேளாங்கண்ணிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்ற மதியரசன் அவரிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கத்தியால் அந்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்தார். இதில், படுகாயமடைந்த மதியரசனே மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மதியரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man attempted kill to his lover


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->