மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து.. தற்கொலைக்கு தூண்டிய சாமியார் கைது..!
Man arrested In Thiruvallur
மாணவியை பாலியல் தொல்லைக்கு உள்ளாகி தற்கொலைக்கு தூண்டிய சாமியாரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளாத்து கோட்டையில் முனியசாமி என்பவர் ஆசிரமம் நடத்தி வருந்தார். இவரது ஆசிரமத்துக்கு கல்லூரி மாணவியிய அவரது பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளனர்.
அந்த மாணவி பூச்சி கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அந்த ,மாணவியின் தற்கொலைக்கு சாமியார் தான் காரணம் என பெற்றோர் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதனை அடுத்து, முனியசாமியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Man arrested In Thiruvallur