இளம்பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்த காதலன் - விழுப்புரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருபது வயது இளம் பெண் ஒருவருக்கு பெரும்புகை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், வெங்கடேசன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது காதலியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசிய வெங்கடேசன், தனது காதலியிடம் ஆடைகள் அனைத்தையும் களைய வைத்து பேசி இருக்கிறார். அப்போது அவர் நிர்வாணமாக இருப்பதை தனது செல்போனில், காதலிக்கே தெரியாமல் பதிவு செய்து வைத்துள்ளார். 

பின்னர், இந்த வீடியோவை காதலியிடம் காண்பித்து, தனக்கு தேவைப்படும் போதெல்லாம் மிரட்டி, அவரை வீட்டுக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். அத்தனையும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. 

வெங்கடேசனின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட இளம்பெண் செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, வழக்கு பதிவு செய்த போலீசார் வெங்கடேசன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த புருஷோத்தமன் உள்ளிட்டோரை கைது செய்தனர். 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for take obscenes vedio in vilupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->