கள்ளகாதலால் அண்ணனை கொலை செய்த தம்பி - விழுப்புரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது தம்பி பாரதி. இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் தங்களது குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் பாரதியின் மனைவி புஷ்பா வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

சில நாட்கள் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த புஷ்பா மனம் திருந்தி பாரதியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இது தொடர்பாக பாரதி மற்றும் அவரது அண்ணனான கதிர்வேல் ஆகியோருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கதிர்வேல் தனது தம்பி வீட்டிற்கு சென்று அவரது மனைவியுடன் தகராறு செய்ததுடன் தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். இதையறிந்த பாரதி தனது அண்ணன் கதிர்வேலின் வீட்டிற்கு சென்று தனது மனைவி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். 

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பாரதி வீட்டிலிருந்த மண்வெட்டியை எடுத்து தனது அண்ணன் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட கதிர்வேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய அவரது தம்பி பாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்த தகராறில் தம்பியால் அண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill brother in vilupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->