தமிழிசை நோக்கி விமானத்தில்.. "பாசிச பாஜக ஒழிக" கோஷமிட்ட வழக்கு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2018ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்ற போது அதே விமானத்தில் பயணம் செய்த சோஃபியா என்ற பெண் "பாசிச பாஜக ஒழிக" என தமிழிசை சவுந்தரராஜனை நோக்கி விமானத்தில் கோஷமிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோபியா உடன் வாக்குவாதம் செய்த தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் சோபியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பின்பு அவர் வழக்கில் இருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக  சோபியாவுக்கு எதிராக நடைபெற்று வந்த இந்த வழக்கை ரத்து செய்வதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC quashed case against women who abolish fascist BJP towards tamilisai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->