மதுரையை அதிர வைத்த சம்பவம்: அரசு தலைமை மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை?!  - Seithipunal
Seithipunal


சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணுக்கு, அரசு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், மதுரை மாநகரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவந்த இளம் பெண்ணுக்கு, மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் பள்ளி சிறுமிகள் முதல் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்தது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவந்த இளம் பெண்ணுக்கு மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை ரேடியாலஜி மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த இளம் பெண்ணின் தாய் மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். 

புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், புகார் தொடர்பாக சம்பவத்தில் இருந்த செவிலியர் இடம் அறிக்கை பெற்று, மருத்துவ கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Young woman Harassment in GH


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->