குழந்தையுடன் தற்கொலைக்கு முயற்சித்த தாய்... தெய்வம்போல வந்து காப்பாற்றிய காவல் சாமிகள்.!
Madurai Woman Suicide Attempt with Baby Police Officers Luckily Rescued
குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்மணியை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பாலை பகுதியை சார்ந்தவர் திலகவதி. இவரது கணவர் கார்த்திக் பாண்டியன். இவர்கள் இருவருக்கும் ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திலகவதி நாராயணபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கார்த்திக் பாண்டியன் கடந்த சில மாதமாகவே வேலைகளுக்கு செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்து வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் திண்டாட தொடங்கியுள்ளது. இதனால் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடும் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிய திலகவதி, தனது ஆண் குழந்தையை தாயாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்து புறப்பட்ட திலகவதி, மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகே அமர்ந்து, கையில் வைத்திருந்த தூக்க மாத்திரையை சாப்பிட்டு தெப்பக்குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதன்போது, அவ்வழியாக எதற்ச்சையாக கண்காணிப்பு பணிக்கு சென்றிருந்த காவல் அதிகாரிகள் செந்தில் மற்றும் வெங்கடேஷ் பாபு, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தையை மீட்டனர். மேலும், திலகவதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவலர்களின் உடனடி உயிர் காக்கும் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Woman Suicide Attempt with Baby Police Officers Luckily Rescued