மதுரை நீட் தேர்வு மாணவி தற்கொலை விவகாரம்.. கொந்தளிக்கும் டிடிவி..!!
Madurai NEET girl Suicide TTV Dhinakaran Regret
மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வருபவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது மகள் ஜோதி துர்கா நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார் (வயது 19). இந்நிலையில் நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு முன்பு மாணவி பெரிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. நீட் தேர்வு அசத்தல் தற்கொலை செய்து கொண்டதாகவும். அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்றும் ஆடியோவில் மாணவி உருக்கமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஜோதி துர்கா, இந்தாண்டு தேர்வுக்கு தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ? " என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai NEET girl Suicide TTV Dhinakaran Regret