குடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் பலியான பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள முல்லை நகர் பகுதியை சார்ந்தவர் ராஜா (வயது 52). தத்தனேரி பகுதியை சார்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மனைவி அல்லிராணி (வயது 45). மற்றொரு உறவினர் ஆறுமுகம் (வயது 65).

இவர்கள் உட்பட மொத்தமாக 11 பேர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு காரில் செல்ல புறப்பட்டுள்ளனர். இவர்களின் கார் இன்று காலை 8 மணியளவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் உழவூரணி பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. 

இதன்போது, அங்குள்ள வளைவில் வேகமாக திரும்பிய கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. காரில் சிக்கியிருந்தவர்களின் அபய குரல் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து அவர்களை மீட்டனர். 

இந்த விபத்தில், அல்லிராணி மற்றும் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காளையார்கோவில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Family Members 3 Person Died Accident at Sivaganga Kalayarkoil 9 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->