#BigBreaking: வேளாண்துறையில் ரூ.1000 கோடி மோசடி.. மதுரையில் கிளையில் பரபரப்பு மனு.!!
Madurai Court Case Appeal about Forgery Rs 1000 Crore in Agriculture 22 June 2021
கடந்த 2013 ஆம் வருடம் முதல் 2021 ஆம் வருடம் வரை வேளாண்துறையில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு வழங்கும் மானிய திட்டங்களை போலியான ஆவணங்கள் மூலமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி தட்க்ஷிணாமூர்த்தி உட்பட பல அதிகாரிகள் கூட்டு சேர்ந்து முறைகேடு செய்ததாகவும், இதன் மூலமாக ரூ.1000 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சொட்டுநீர் பாசனம் வழங்கும் திட்டத்தில் அதிகளவு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் திருச்சியை சார்ந்தவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி தட்க்ஷிணா மூர்த்தியை எதிர்மனுதாரராக சேர்த்து இருக்கின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Court Case Appeal about Forgery Rs 1000 Crore in Agriculture 22 June 2021