சென்னையை தொடர்ந்து மதுரையிலும் முழு ஊரடங்கு.. தமிழக அரசு அறிவிப்பு.!!
Madurai corona virus curfew
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசு பல கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கடுமையான அளவு கொரோனா அதிகரித்ததால் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் கரோனா வைரஸின் வீரியமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பல மாவட்டங்கள் மீண்டும் கொரோனா பாதிப்பை கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் சென்னை உட்பட சென்னை மாநகர காவல் எல்லைகளுக்கு உட்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அலமாகியுள்ளது. இந்நிலையில், ஜூன் 23 ஆம் தேதியான நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாகியுள்ளது.
மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஏழு நாட்களுக்கும் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அத்தியாவசிய கடைகளை தவிர்த்து பிற கடைகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 28 ஆம் தேதி எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai corona virus curfew