அதிகாலையில் பரபரப்பு - மதுரை அருகே பாஜக நிர்வாகி படுகொலை.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பாஜக நிர்வாகி சக்திவேல் தனது சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். 

இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை மெட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மேற்கு தாம்பரம் அருகே பாஜக எஸ்சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொடூர கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai bjp executive murder in madurai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->