மோடியின் பாதுகாவலன் நான்.. மதுரை ஏர்போர்ட்டில் ஏர்கன்னுடன் நுழைந்த இளைஞர்..!! - Seithipunal
Seithipunal


மதுரை விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்துடன் வந்த வாலிபர் ஒருவர், பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியில் தனது வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். 

அந்த சமயத்தில், அவரது கையைப்பையில் 4 ஏர்கன் மற்றும் 4 அலைபேசிகள் இருந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்கையில், நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன் என்றும், டெல்லிக்கு அழைத்துச் செல்ல தனி விமானம் வருகிறது என்றும், தனக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்றும் கூறியுள்ளார். 

இதனையடுத்து விமான நிலைய பாதுகாப்பு படையினர், பெருங்குடி காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் வெங்கடசமுதிரம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் அஸ்வத்தாமன் (வயது 21) என்றும், இவர் கல்லூரியில் படிக்கும்போது என்.சி.சியில் இருந்த நிலையில், இப்போது மனநலம் பாதிக்கப்பட்டு இரு சக்கர வாகனத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai airport Mentally affected man create panic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->