பதில் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும்.. மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.!!
Madrashc warning to TNGovt CentralGovt
தமிழ்நாட்டில் கழுகுகளின் பாதுகாப்புக்காக ஆய்வு மையம் அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க கோரி உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவை ஏற்று மத்திய மாநில அரசுகள் பதிலளிக்காத நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பதில் மனு தாக்கல் செய்யாத மத்திய மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் ஜூன் 5-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம விதிக்க நேரிடும் என மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Madrashc warning to TNGovt CentralGovt