பெற்றோர் எதிர்ப்பு... ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி..!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் நிஷா (17). இவர் நாகையில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில் இவரும், திருவாரூர் மாவட்டம் பருத்திக்கோட்டை பகுதியை சேர்ந்த உறவினரான இன்ஜினீயர் பாரதிராஜா(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் இருவரும் திருவாரூர் மாவட்டம் சடையக்குளம் அருகே உள்ள மரத்தில் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அவ்வழியாக சென்றவர்கள் பாரதிராஜாவும், நிஷாவும் தூக்கில் பிணமாக தூங்குவதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lovers commits suicide in thiruvarur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->