மனைவி கோபித்து கொண்டு சென்றதால்.. மனமுடைந்த லாரி ஓட்டுநர் விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனமுடைந்த லாரி ஓட்டுநர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தாமஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கவுதம்ராஜ் (32). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் இந்நிலையில் கவுதம்ராஜ், வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நித்தியா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் மனவேதனையடைந்த கவுதம்ராஜ், வாழ்க்கையில் வெறுப்புடைந்து வீட்டில் யாரும் இல்லாத போது படுக்க அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சங்ககிரி போலீசார், உயிரிழந்த கவுதம்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry driver commits suicide in salem


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->