6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! போக்சோவில் லாரி ஓட்டுநர் கைது.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து லாரி ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பொட்டல் நகர் பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகன் லாரி ஓட்டுனர் மகேஷ்(30). இவர் சம்பவத்தன்று 6 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் சிறுமி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.

இதைப் பார்த்த மகேஷ் அதிர்ச்சடைந்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, தப்பி ஓடிய மகேஷ்சை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry driver arrested for sexually harassing a 6 year old girl in tirunelveli


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->