பீரில் மிதந்த பல்லி - அதிர்ச்சியில் குடிமகன்கள்.!
lizard floating in beer bottle
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் அரசு மதுபான கடையில் இன்று மூன்று நண்பர்கள் 12 கிங்பிஷர் பீர் பாட்டில்களை வாங்கியுள்ளனர். அதனை அவர்கள், வாகனத்தில் வைக்கும் போது, அதில் ஓரு பீர் பாட்டிலில் மட்டும் அளவு கம்மியாக இருந்துள்ளது.
இதைப்பார்த்த அவர்கள் பீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அரசு மதுபான ஊழியரிடம் பீர் பாட்டிலில் மதுபானம் குறைவாக உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் அந்த பீர் பாட்டிலை மேல் நோக்கி தூக்கிப் பார்த்த பொழுது அதன் உள்ளே பல்லி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்து மதுபான கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அரசு மதுபான கடை சற்று நேரம் மூடப்பட்டது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இதேபோல், கடந்த வருடம் இதே அரசு மதுபான கடையில் காலாவதியான பீர்பாட்டில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்பொழுது பீர் பாட்டிலில் பல்லி இருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
English Summary
lizard floating in beer bottle