ஓய்வுதியதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும்... சுயேட்சை MLA  நேரு கோரிக்கை! - Seithipunal
Seithipunal


வயது முதிர்வை கருத்தில் கொண்டு அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் அஞ்சல் துறை மூலம் ஓய்வுதியதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதைப்போல புதுச்சேரியிலும் அதனை கொண்டுவரவேண்டும் என சுயேட்சை எம்எல்ஏ நேரு கோரிக்கைவிடுத்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில்  பூஜ்ஜியம் நேரத்தில் பேசிய சுயேட்சை எம்எல்ஏ நேரு,கூறுகையில்: புதுச்சேரி மாநிலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஏறத்தாழ முப்பதாயிரம் பேர் ஓய்வுதியம் பெற்று வரும் நிலையில் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய வருடத்திற்கு ஒரு முறை அதாவது மே மாதம் தொடங்கி அந்த மாத இறுதிக்குள் (Life Certificate) வாழ்நாள் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக வயது முதிர்ந்த பென்ஷன்தாரர்கள் சிரமப்பட்டு அந்தந்த கருவூலத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.

இதனால் அவர்கள் கருவூலங்களுக்கு சென்று வருவதற்காக மற்றவர்கள் துணை தேவைப்படுவதுடன், போக்குவரத்துக்கான வாகன செலவுகளும் செய்ய நேரிடுகிறது. இதனால் ஓய்வுதியதாரர்களின் பணம் விரயமாவதுடன் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உடல்நலம் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆகையால் அவர்களின் வயது முதிர்வை கருத்தில் கொண்டு அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் அஞ்சல் துறை மூலம் ஓய்வுதியதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் சான்றிதழ் ஒன்றுக்கு ரூ.70 கட்டணத்தில் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று சேவை வழங்க அந்த மாநில நிதியமைச்சர் முன்னிலையில் India Post Payments Bank உடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது.

அதை பின்பற்றி நம் புதுச்சேரியிலும் இதை நடைமுறைப்படுத்த ஏதுவாக அஞ்சல் துறையின் India Post Payments Bank உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொடுத்து ஓய்வுதியதாரர்களின் சிரமத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Life certificates should be issued at the residence of pensioners. Independent MLA Nehru demands


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->