2 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


14 வயது சிறுமிக்கு இரண்டு வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏர்வாடி கருவேப்பிலாங்காடு, பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி திருமலை(41). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமலை, சேலம் மாவட்டம் மல்லூர் அருகே தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்பொழுது திருமலை 14 வயது சிறுமிக்கு இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமி திருமலையின் கொடுமையால் கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டிலிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் திருமலையை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரண்டு ஆண்டுகளாக 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த திருமலைக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

laborer who sexually harassed a girl for two years was sentenced to life imprisonment in salem


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->