பாகிஸ்தானுக்கு மரியாதை தரனும்.! இல்லன்னா? - எச்சரிக்கும் காங்கிரஸ் தலைவர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 18 வது மக்களவை பொதுத் தேர்தலுக்கான மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில் அரசியல் கட்சிகள் அடுத்த கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. தனது பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் முன்னுரிமை வழங்குவதாகவும் மத ரீதியான பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்துள்ளார். 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் ஒருவரான மணிசங்கர் ஐயர் பாகிஸ்தானுக்கு இந்தியா மரியாதை அளிக்க வேண்டும் என கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் "அணுகுண்டு வைத்திருப்பதால் பாகிஸ்தானுக்கு இந்தியா மரியாதை வழங்க வேண்டும். நான் மரியாதை கொடுக்க விட்டால் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டை பயன்படுத்த நினைப்பார்கள்" என மணிசங்கர் ஐயர் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader comment India should respect Pakistan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->