ஈரோடு அருகே பரிதாபம்.! மொபட் மோதி கூலித்தொழிலாளி பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மொபட் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு செங்குத்தம் பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன் (55). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், முருகன் பவானி-பெருந்துறை சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் குமார்(25) என்பவர் ஓட்டி வந்த மொபட் எதிர்பாராத விதமாக முருகன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சித்தோடு போலீசார், உயிரிழந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer killed in moped collision in erode


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->