திண்டுக்கல் || சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி.! போக்சோவில் கைது செய்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடகாடு சுரைக்காய்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராமர்(57). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமான நிலையில், தனது மகளின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட பெற்றோர் சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து சிறுமியிடம் விசாரணை செய்ததில், ராமர் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer arrested for impregnating girl in Dindigul


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->