நடு ரோட்டில் பீர் பாட்டில்கள்.. கொத்து கொத்தாக அள்ளிசென்ற குடிமகன்கள்.. கிருஷ்ணகிரியில் விறுவிறுப்பு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரிக்கு அருகில் உடைந்த மது பாட்டில்களை மதுப்பிரியர்கள் அள்ளி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவாவில் இருந்து பீர் பாட்டில்களை சுமந்தவாறு சரக்கு லாரி ஒன்று பாண்டிச்சேரிக்கு வந்தது. அப்போது கிருஷ்ணகிரிக்கு அருகில் ஒரு மேம்பாலத்தில் அந்த வாகனம் மோதியுள்ளது. இதனால் பீர் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்துள்ளது.

அப்போது பீர் பாட்டில்கள் அனைத்தும் உடைந்து தெருவில் கொட்டியது. இதில் சில பீர் பாட்டில்கள் உடையாமல் இருந்த நிலையில், அதை குடிமகன்கள் கொத்துக்கொத்தாக வந்து அள்ளிச் சென்றனர். மேலும் உடைந்த பீர் பாட்டில்களில் இருந்து ஆறாக பீர் ஓடியது. 

இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரத்தை கொண்டு பீர் பாட்டில்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு அதிர்ஷ்டவசமாக உயிர் பாதிப்பு ஏற்படவில்லை. போலீசார் வருவதற்குள் குடிமகன்கள் பீர் பாட்டில்களை அள்ளிக்கொண்டு ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnakiri Beer Lorry accident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->