கர்ப்பிணி மனைவியுடன் கால்நடையாக தமிழகம் வரும் தம்பதி...!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மாநிலத்திற்கு இடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலத்தில் பணியாற்றி வரும் நபர்கள் சொந்த ஊருக்கு நடந்தே வருகின்றனர்.

இந்த நிலையில், 36 வயதான இளைஞர் மற்றும் அவரது நிறைமாத கர்ப்பிணி, 2 வயது குழந்தையுடன் நடந்து வருவதாக தகவல் வெளியானது. இது குறித்து பேசிய சமயத்தில், தனது பெயர் செல்வம் என்றும் மனைவியின் பெயர் மதிவதனி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திர மாநிலத்தில் பணியாற்றி வரும் நிலையில், ஊரடங்கின் காரணமாக வருமானம் இல்லை. 

இதனால் சொந்த ஊருக்கு செல்லலாம் என்று முடிவு செய்து மனைவியுடன் புறப்பட்டுள்ளோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சொந்த மாவட்டமாக கொண்ட தம்பதியினர் விவசாயம் இல்லாததால் ஆந்திராவுக்கு சென்றதும், கர்ப்பிணி மனைவியுடன் தற்போது திரும்பி வருவதும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri pregnancy girl return tamilnadu with husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->