கிருஷ்ணகிரி: தினமும் மது அருந்திவிட்டு சண்டை.. கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு.!
Krishnagiri man Suicide due to daily fight Liquor Consumption
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.பூசாரிப்பட்டி கிராமத்தை சார்ந்தவர் மணி (வயது 31). இவர் தச்சு தொழிலாளியாக இருந்து வரும் நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் வீட்டில் கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று கடந்த 25 ஆம் தேதியும் இவர்களுக்குள் தகராறு ஏற்படவே, மனமுடைந்த மணி வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி இருந்துள்ளார். இவரை மீட்ட குடும்பத்தினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மகாராஜாகடை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Krishnagiri man Suicide due to daily fight Liquor Consumption