பள்ளி சிறுமியை கர்ப்பிணியாக்கிய காமுகன்.. காதல் வார்த்தையில் அரங்கேறிய கொடூரம்.!
Krishnagiri Kallavi child sexual abuse by Construction daily wages worker
கல்லாவி பகுதியில் 15 வயது சிறுமியை 4 மாத கர்பிணியாக்கிய காமுக கட்டிட தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லாவி பகுதியில் 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியை சார்ந்தவன் ஹரிதாஸ். இவன் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறான்.
இந்நிலையில், ஹரிச்சந்திரன், சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இவனது காதல் வலையில் விழுந்த சிறுமியும் மீண்டும் எழத் தெரியாது காதலில் மயங்கியுள்ளார். பின்னர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காமுகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சிறுமியின் உடல்நிலையை சோதிக்க பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரணை செய்கையில், ஹரிஹரனின் கொடூரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததை தொடர்ந்து, காமுகனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Krishnagiri Kallavi child sexual abuse by Construction daily wages worker