காதல் திருமணம் செய்த மனைவி குழந்தையுடன் மாயம்.. கணவர் காவல்நிலையத்தில் கண்ணீர் புகார்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசனட்டி அமிர்தா நகர் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீதர் (வயது 33). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக ஆர்ஷியா (வயது 22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். 

இவர்கள் இருவருக்கும் தற்போது சுபிக்ஷனா என்ற 2 வயது பெண்குழந்தை இருக்கிறது. இந்நிலையில், சம்பவத்தன்று தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறிய ஆர்ஷியா, மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. 

ஆர்ஷியா மற்றும் குழந்தை சுபிக்சனாவை பல இடங்களில் தேடியும் காணாததால், ஸ்ரீதர் அங்குள்ள சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் தேடி வருகின்றனர். 

மேலும், தனது மனைவி மற்றும் குழந்தையை கொத்தண்டப்பள்ளி பகுதியை சார்ந்த அணில் (வயது 27) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என்று ஸ்ரீதர் புகாரில் குறிப்பிட்டுள்ளதால், காவல் துறையினர் ஸ்ரீதரையும் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Hosur Wife and Baby missing Police Investigation 6 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->