கர்ப்பிணி மகளை சுட்டுக்கொலை செய்த தந்தை.. ஓசூர் அருகே பெரும் சோகம்.. குடிகார தந்தையால் பரிதாபம்.!
Krishnagiri Hosur Father Murdered Pregnant Daughter Police Investigation 15 April 2021
ஓசூர் அருகே கர்ப்பிணி மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு, வீட்டை விட்டு ஓடிய தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் கரடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். அவரது மகள் வெங்கடலட்சுமி. வேங்கடலட்சுமியின் கணவர் ஸ்ரீநிவாஸ். வெங்கடலட்சுமி - ஸ்ரீனிவாஸ் தம்பதிக்கு திருமணம் முடிந்து இருக்கிறது.
இந்நிலையில், வெங்கடலட்சுமி தனது தந்தையின் வீட்டிற்கு கணவருடன் விருந்துக்கு வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த அருணாச்சலம், மனைவி மாதவியுடன் மதுபோதையில் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று நடைபெற்ற சண்டையில் ஆத்திரமடைந்த அருணாசலம், நாட்டு துப்பாக்கி எடுத்து மனைவியை சுட முயற்சித்துள்ளார். இதன்போது குறுக்கே வந்த மகள் மீது குண்டு பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மகளை சுட்டுக்கொலை செய்துவிட்ட பதற்றத்தில் அருணாசலம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் இந்த விஷயம் தொடர்பான தகவல் காவல்துறையினருக்கு தெரியவரவே, காவல் துறையினர் வெங்கடலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அருணாசலத்தை தேடி வருகின்றனர்.
வெங்கடலட்சுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், மகளை தந்தையே சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Krishnagiri Hosur Father Murdered Pregnant Daughter Police Investigation 15 April 2021