தமிழகத்துக்கு புயல் வரனும்! மழை பெய்யனும்!- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வேண்டுதல்! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் இன்று செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் "வடகிழக்கு பருமழைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்களை அறிவுறுத்தியிருக்கிறார்.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு பேரிடர் மீட்பு தொடர்பாக அனைத்துத் துறை உயர் அதிகாரிகளையும் கூட்டி கூட்டம் நடத்தி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு மழை பெய்தாலும் அதை தாங்கக் கூடிய சக்தி தமிழ்நாட்டிற்கு உள்ளது. மழையால் பாதிப்பு ஏற்படாமல் சரிசெய்யும் வலிமையும் தமிழக அரசுக்கு உள்ளது. சென்னையில் வேளச்சேரி பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. 

அதற்கு ஏற்றார் போல அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். புயல் வரவேண்டும், ஆனால் பாதிப்பு இல்லாமல் வரவேண்டும். புயல் வந்தால்தான் நமக்கு மழை வரும். தமிழகத்துக்கு மழை தேவை இருக்கிறது. அனைத்து நீர்த் தேக்கங்களும், நீர்நிலைகளும் தண்ணீர் இல்லாமல் உள்ளன. எனவே, புயல் வர வேண்டும். அது மக்களை பாதிக்காத புயலாக இருக்க வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KKSSR said if storm in TamilNadu there will be rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->